மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை பிரதானி ரொஷான் குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்காக நான்கு வருடங்களுக்கு மேலாக திட்டமிட்டு உழைத்த வியத்மக குழாமை வழி நடாத்திய முன்னாள் பாதுகாப்பு படையதிகாரிகள் தாம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக முறையிட்டு வந்த நிலையில் பல்வேறு உயர் பதவிகளில் தற்போது முன்னாள் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடு இராணுவ மயப்படுவதாகவும் மறுபுறத்தில் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment