ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு ஏற்ப தொழில் நுட்பத்துறையில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் பாடசாலைகள் தோறும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பபு மத்தி கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் நு னுயல என்ற தலைப்பில் தொழில் நுட்பத்துறையில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் கண்காட்சி இன்று (20.02.2020) வியாழக்கிழமை முழு நாளும் பாடசாலையில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment