சஜித் பிரேமதாச பிரதமரானால் ஈற்றில் கீரியும் - பாம்புமாக ஜனாதிபதியும் பிரதமரும் சண்டையிட்டுக் கொள்ளும் நிலை உருவாகும் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியமளித்துத் திரும்பிய நிலையில் செய்தியாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே கம்மன்பில இன்று இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மாலு பனிசில் 'மீன்' இல்லாதது போல், கிம்புலா பனிசில் 'முதலை' இல்லாதது போல் சஜித்தின் சமகி பெரமுனவில் ஒற்றுமையும் இல்லையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment