ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன இடையிலான கூட்டணி ஒப்பந்தம் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தால் தான் மஹிந்த அணியில் இணையப் போவதாக தெரிவிக்கிறார் நிசாந்த முத்துஹெட்டிகமகே.
2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது மைத்ரிபால சிறிசேனவின் பிரச்சார மேடையை எரியூட்டி நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிசாந்த மீண்டும் திரும்பி வந்து மைத்ரி அணியில் அங்கம் வகித்திருந்தார்.
எனினும், தொடர்ந்தும் மஹிந்த அணியோர் சார்ந்தே இயங்கி வரும் முத்துஹெட்டிகமகே தற்போது சுதந்திரக் கட்சிக்கு இவ்வாறு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment