தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு சர்ச்சையில் சிக்கியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 26ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் தொடர்வதன் பின்னணியில் ரஞ்சனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஞ்சன் - நீதிபதி பிலபிட்டியே இடையே இடம்பெற்ற உரையாடலின் ஒலிப்பதிவினை ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment