தற்சமயம் 156 புதிய அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
ஏப்ரல் 22 அல்லது மே மாதம் 4ம் திகதி தேர்தல் இடம்பெறக் கூடும் எனவும் தெரிவித்துள்ள அவர், ஏலவே பதிந்துள்ள கட்சிகளில் தேர்தல்களில் போட்டியிடாத, வாக்குகளைப் பெறாத கட்சிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் இடம்பெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment