எதிர்வரும் தேர்தலில் யாருடனும் 'கூட்டணி' இல்லை: JVP - sonakar.com

Post Top Ad

Saturday 11 January 2020

எதிர்வரும் தேர்தலில் யாருடனும் 'கூட்டணி' இல்லை: JVP



எதிர்வரும் தேர்தலில் எந்தத் தரப்புடனும் கூட்டணி சேரப் போவதில்லையெனவும் மக்கள் சக்தியாக சிவில் அமைப்புகளுடன் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகவே போட்டியிடப் போவதாகவும் தெரிவிக்கிறது ஜே.வி.பி.



கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகவே ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க போட்டியிட்டிருந்த அதேவேளை எதிர்பார்த்ததை விட குறைந்தளவு வாக்குகளையே பெற்றிருந்தார்.

எனினும், எதிர்வரும் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியே ஜே.வி.பியின் அடையாளம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment