சீனாவிலிருந்து வரும் மாணவர்களை இரு வாரம் முகாமில் வைக்க ஏற்பாடு - sonakar.com

Post Top Ad

Tuesday 28 January 2020

சீனாவிலிருந்து வரும் மாணவர்களை இரு வாரம் முகாமில் வைக்க ஏற்பாடு


சீனாவிலிருந்து விசேட ஸ்ரீலங்கன் விமானம் ஊடாக அழைத்துவரப்படவுள்ள மாணவர்களை இரு வாரங்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் வைத்து பரிசோதனைகளை நடாத்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சீனாவில் இதுவரை 100க்கு அதிகமானோர் கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் இலங்கையிலும் சீனப் பெண்ணொருவருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்களை இரு வாரங்கள் முகாமில் வைக்கப்போவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment