சீனா: இலங்கைத் தூதரகம் அலட்சியம்; சஜித் சாடல்! - sonakar.com

Post Top Ad

Friday 31 January 2020

சீனா: இலங்கைத் தூதரகம் அலட்சியம்; சஜித் சாடல்!


ஆட்கொல்லி கொரோனா வைரஸினால் சீனாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதில் இலங்கைத் தூதரகம் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாக சாடியுள்ளார் சஜித் பிரேமதாச.



அங்குள்ளவர்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு முறையிடும் அளவுக்கு இலங்கைத் தூதரகம் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, சீனாவில் உள்ள மாணவர் தொகுதியொன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் இன்றும் ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment