பொதுத் தேர்தலையும் வென்றால் தான் சாத்தியம்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Sunday 12 January 2020

பொதுத் தேர்தலையும் வென்றால் தான் சாத்தியம்: பிரசன்ன


பொதுத் தேர்தலையும் பெரமுன வென்றால் மாத்திரம் தான் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியம் என தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.



கோட்டாபே ராஜபக்சவுக்கு கிடைத்த பெரும்பான்மையின ஆதரவை பெரமுனவின் அடித்தளமாக மாற்றுவதில் கடும் பிரயத்தனத்துடன் விகாரைகள் ஊடாக பிரச்சார வலையமைப்பு இயங்கி வருவதாகக் கூற்ப்படும் நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றதும் முதலில் 19ம் திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெரமுன தரப்பு மேலும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment