எ.க. தலைவர்: UNP நாளை தீர்மானிக்கும் - sonakar.com

Post Top Ad

Wednesday 4 December 2019

எ.க. தலைவர்: UNP நாளை தீர்மானிக்கும்



ஐககிய தேசியக் கட்சிக்குள் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு நாளை தீர்மானம் கிடைக்கும் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் நா.உறுப்பினர் காவிந்த ஜயவர்தன.



சஜித் பிரேமதாசவிடம் கட்சித் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒப்படைக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரணில் அதிருப்தியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் நாளைய தினம் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறில்லையாயின், வெள்ளிக்கிழமை முதல் சஜித்தை தலைவராக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என ஹரின் பெர்னான்டோ ஏலவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment