முன்னாள் SPC தலைவர் ரூமிக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Tuesday 31 December 2019

முன்னாள் SPC தலைவர் ரூமிக்கு விளக்கமறியல்


ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இடம்பெற்ற வெள்ளை வேன் சாரதிகளின் செய்தியாளர் சந்திப்பின் பின்னணியில் முன்னாள் அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் ரூமி முஹமதுக்கு  ஜனவரி 6ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.



ராஜித சேனாரத்னவுடன் தேடப்பட்டு வந்த குறித்த நபர், இன்று சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன் சாரதிகளை அறிமுகப்படுத்திய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment