ஜனாதிபதியின் பெயர் சொல்லி பணம் பறிப்பு: இருவர் கைது - sonakar.com

Post Top Ad

Monday 9 December 2019

ஜனாதிபதியின் பெயர் சொல்லி பணம் பறிப்பு: இருவர் கைது



ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அரச வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாக நம்ப வைத்து பணம் பறித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



நிஹால் திசாநாயக்க மற்றும் நுவன் ஜயகொடி என அறியப்படும் இருவரே கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியமைச்சில் மற்றும் ஆசிரிய தொழிலைப் பெற்றுத்தருவதாகவும் பலர் மோசடி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment