அவுஸ்திரேலிய தூதர் - ஜனாதிபதி சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Friday 6 December 2019

அவுஸ்திரேலிய தூதர் - ஜனாதிபதி சந்திப்பு


இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதர் டேவில் கோல் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை இன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.



தமது நாட்டின் சார்பில் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தி கூட்டுறவைத் தொடர்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சரும் இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது நாடு சார்பாக வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment