என்னால் தான் நீதியான தேர்தல் இடம்பெறப் போகிறது: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Friday 15 November 2019

என்னால் தான் நீதியான தேர்தல் இடம்பெறப் போகிறது: மைத்ரி


நான் நடுநிலை வகித்து நேர்மையாக இருந்ததனால் தான் நீதியான தேர்தல் இடம்பெறுவதற்கு வழி பிறந்தது என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பெரமுனவுடன் இணைந்து கொண்ட போதிலும் தான் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லையென தெரிவித்திருந்த மைத்ரி இது வரை எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை.

தனது பதவிக்காலம் முடிந்ததும் ஒதுங்குவதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வைத்துள்ள போதிலும் தனது மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக தொடர்ந்தும் அரசியலில் இயங்கப் போவதாக முன்னரே அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment