நாட்டில் வறுமையை ஒழிப்பேன்: கோட்டா! - sonakar.com

Post Top Ad

Monday 4 November 2019

நாட்டில் வறுமையை ஒழிப்பேன்: கோட்டா!



தான் அதிகாரத்துக்கு வந்ததும் வறுமையை ஒழித்து இருப்பவர் இல்லாதவர் என்ற இடைவெளியை இல்லாதொழிக்கப் போவதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.



பண்டாரகமயில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்ததுடன் நாட்டின் தொழிலதிபர்கள் வர்த்தகர்களிடம் நான்கு வருடங்களாக அபிப்பிராயங்களைப் பெற்று இதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, கோட்டாபே ராஜபக்ச கடந்த தடவை அதிகாரத்தில் இருந்த போது மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ரஞ்சன் ராமநாயக்க தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment