தபால் வாக்குச் சீட்டை 'போட்டோ' எடுத்த மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Saturday 2 November 2019

தபால் வாக்குச் சீட்டை 'போட்டோ' எடுத்த மூவர் கைது


தமது தபால் வாக்குச் சீட்டுக்களை படம் பிடித்த மூவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கெகிராவ மற்றும் கட்டுகஸ்தொட்டயைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் மற்றும் கம்பளையைச் சேர்ந்த பாடசாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாகக் கூறப்படும் ஒரு சிலர் மீதும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment