கிழக்கை அரபு மயமாக்குவதன் பொறுப்பாளி ஹிஸ்புல்லாஹ்: PSC - sonakar.com

Post Top Ad

Thursday 24 October 2019

கிழக்கை அரபு மயமாக்குவதன் பொறுப்பாளி ஹிஸ்புல்லாஹ்: PSC



கிழக்கு மாகாணத்தை அரபு மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வே பொறுப்பு என தெரிவிக்கிறது நாடாளுமன்ற தெரிவுக்குழு.



ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இடம்பெற்ற விசாரணைகளின் இறுதி அறிக்கை நேற்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் புலனாய்வுத் துறையின் பலவீனமே தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போனதற்கான அடிப்படைக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் உட்பட முக்கிய உயர் பதவிகளில் உள்ளோர் அனைவரும் தமது பொறுப்புக்களை சரிவரச் செய்யாததும் தாக்குதல் இடம்றெக் காரணம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதுடன் கிழக்கை அரபு மயமாக்குதலுக்கு ஹிஸ்புல்லாஹ்வே பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment