பூஜிதவுக்குப் பிணை; ஜனவரியில் வழக்கு விசாரணை - sonakar.com

Post Top Ad

Tuesday 1 October 2019

பூஜிதவுக்குப் பிணை; ஜனவரியில் வழக்கு விசாரணை


பொலிஸ் தலைமையகத்தில் லிப்டில் பணியாற்றிய ஊழியரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இன்று கைதான பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



2 லட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியிலேயே இன்றைய கைது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment