குடும்ப ஆட்சி மீண்டும் வர விட மாட்டோம்: நவின் - sonakar.com

Post Top Ad

Thursday 10 October 2019

குடும்ப ஆட்சி மீண்டும் வர விட மாட்டோம்: நவின்



நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சி வருவதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.



கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியானால், மஹிந்த ராஜபக்சவே பிரதமராவார். அது ராஜபக்ச குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்குவதற்கு வழி வகுத்துவிடுவதோடு நாட்டை இருண்ட யுகத்திற்குத் தள்ளி விடும். எனவே, குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக விட மாட்டோம் என அவர் தெரிவிக்கிறார்.

மஹிந்த, கோட்டா, சமல், அவரின் மகன், நாமல், அவர்களது சகோதரர்கள், பசில் என நீண்ட ராஜபக்ச பட்டியல் உள்ள போது நாடு அதிலிருந்து மீள முடியாது எனவும் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment