பிரதமர் யார் என்று சஜித் சொல்ல வேண்டும்: கம்மன்பில! - sonakar.com

Post Top Ad

Saturday 5 October 2019

பிரதமர் யார் என்று சஜித் சொல்ல வேண்டும்: கம்மன்பில!


தான் ஜனாதிபதியானால் யாரைப் பிரதமராக்குவார் என்பதை சஜித் பிரேமதாச பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்கிறார் உதய கம்மன்பில.



ரணில் - சிறிசேன குழப்பத்தால் நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்து போயிருந்ததாகவும் அதிலிருந்து விடுபட நேர்மையான செயற்பாடு அவசியப்படுவதாகவும் தெரிவிக்கும் அவர், சஜித் பிரேமதாச இவ்விடயத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறார்.

கோட்டாபே வென்றாலும் இல்லாவிட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே கம்மன்பில இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment