மக்கள் அபிலாசைகளுக்கேற்ற துடிப்பான அரசு உருவாகும்: சஜித் - sonakar.com

Post Top Ad

Friday 25 October 2019

மக்கள் அபிலாசைகளுக்கேற்ற துடிப்பான அரசு உருவாகும்: சஜித்


நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கேற்ப துடிப்பான அரச நிர்வாகம் உருவாகும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.



செயற்திறன்மிக்க அரசாங்கம், மக்களின் இதய துடிப்பை உணர்ந்த அரச நிர்வாகம் மற்றும் கீழ்மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என தெரிவிக்கும் அவர், அதற்கேற்ப சிறந்த செயற்பாட்டுக் குழு ஒன்று தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, ரணில் - ரவி - ரிசாத் ஆகியோருக்கு பதவி வழங்கப்படுமா என கேள்வியெழுப்பி வசந்த சேனாநாயக்க சர்ச்சையொன்றை உருவாக்க முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment