சரியான முடிவெடுக்கும் அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பு: கோட்டா - sonakar.com

Post Top Ad

Tuesday 22 October 2019

சரியான முடிவெடுக்கும் அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பு: கோட்டா


சரியான முடிவை எடுக்கும் அரச ஊழியர்களைத் தாம் ஆட்சியமைத்ததும் பாதுகாக்கப் போவதாக தெரிவிக்கிறார் பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச.


நடைமுறை அரசின் செயற்பாடுகளால் அரச ஊழியர்கள் பெரும் இக்கட்டுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் அதனையும் தாண்டி சரியான முடிவை எடுப்போருக்குத் தமது பாதுகாப்பு இருப்பதாகவும் கோட்டா தெரிவிக்கிறார்.

கடந்த ஐந்து வருட காலமாகவே அரச இயந்திரம் முழுமையாக இயங்க முடியாமல் அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் கோட்டா இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment