எல்பிட்டியவை ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது சிறுபிள்ளைத் தனம்: கயந்த - sonakar.com

Post Top Ad

Saturday 12 October 2019

எல்பிட்டியவை ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது சிறுபிள்ளைத் தனம்: கயந்த


எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனம் என தெரிவிக்கிறார் அமைச்சர் கயந்த கருணாதிலக்க.



தேர்தலுக்கு முன்பாக மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறே கருத்து தெரிவித்ததுடன் எல்பிட்டிய என்பது சிறிய பிரதேச சபை, அதனை ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிட முடியாது என்றும் விளக்கமளித்திருந்தார்.

எனினும், நேற்றைய தேர்தல் முடிவின் பின் பெரமுன தரப்பு அதனை ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பகுதியாக தெரிவித்து வரும் நிலையில் கயந்த இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment