நான்கு நாட்களில் 459 தேர்தல் முறைப்பாடுகள் - sonakar.com

Post Top Ad

Sunday 13 October 2019

நான்கு நாட்களில் 459 தேர்தல் முறைப்பாடுகள்


நேற்று முன் தினம் மாலை 4.30 முதலான 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 83 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அதேவேளை கடந்த நான்கு தினங்களில் 459 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் முறைப்பாடுகளுக்கான மையம்.



தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான அலுவலகங்கள் ஊடாக இவ்வாறு பெருந்தொகை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை 11க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பங்களும் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் அரச வாகனங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சார நடவடிக்கைளில் ஈடுபட்டதாக பிரதேச சபை உதவித் தவிசாளர் ஒருவர் மீதும் முறைப்பாடு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment