பெரமுனவுக்கு மைத்ரி 24 மணி நேர காலக் கெடு - sonakar.com

Post Top Ad

Friday 4 October 2019

பெரமுனவுக்கு மைத்ரி 24 மணி நேர காலக் கெடு


மொட்டுச் சின்னத்தைக் கைவிட்டாலொழிய ஸ்ரீல்ஙகா சுதந்திரக் கட்சி பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென தெரிவித்து வரும் நிலையில் இறுதியாக 24 மணி நேரக் காலக் கெடு வழங்கி பசில் ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் சு.க இதனை அறிவித்துள்ளது.



சின்னத்தை மாற்றுவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும், மாற்றாமல் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கப் போவதில்லையென தயாசிறி தரப்பு தெரிவிக்கிறது.

இப்பின்னணியில் கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் ஒப்பத்துடன் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment