ஜனாதிபதி தேர்தல்: 20 பேர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தினர்! - sonakar.com

Post Top Ad

Wednesday 2 October 2019

ஜனாதிபதி தேர்தல்: 20 பேர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தினர்!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 20 பேர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது தேர்தல் செயலகம்.



நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கு ஒக்டோபர் 6ம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. 

கோட்டா, அநுர குமார உட்பட்டோர் ஏலவே கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment