ரிசாதின் பாதுகாப்பில் 'துருக்கி' தீவிரவாதிகள்: SB - sonakar.com

Post Top Ad

Thursday 19 September 2019

ரிசாதின் பாதுகாப்பில் 'துருக்கி' தீவிரவாதிகள்: SB



அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பில் துருக்கி தீவிரவாதிகள் நாட்டில் தங்கியிருப்பதாகவும் அவருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.



துருக்கியிலிருந்து நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு இவ்வாறு தீவிரவாதிகளைக் கொண்டு வந்து அடைக்கலம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கின்ற எஸ்.பி, அமைச்சர் ரிசாதுக்கு எதிராக காணிக் கொள்வனவு தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆதாரத்துடன் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்த எஸ்.பி. திசாநாயக்க இவ்வாறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment