சஜித் பிரேமதாச யதார்த்தத்துக்குப் புறம்பாகப் பேசுகிறார்: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Monday 2 September 2019

சஜித் பிரேமதாச யதார்த்தத்துக்குப் புறம்பாகப் பேசுகிறார்: பொன்சேகா


தான் ஜனாதிபதியானால், நாட்டில் உள்ள பெண்களையெல்லாம் பணக்காரர்களாக மாற்றப் போவதாகவும் இன்னும் பல யதார்த்தத்துக்குப் புறம்பான கதைகளையும் சஜித் பிரேமதாச தெரிவித்து வருவதாக விசனம் வெளியிட்டுள்ளார் சரத் பொன்சேகா.


நாட்டிலுள்ள 14,000 ஊர்களுக்கும் தான் வரப் போவதாக தெரிவிக்கும் சஜித் பிரேமதாசவால் அவ்வாறு தனது ஐந்து வருட பதவிக்காலத்தில் செய்யவே முடியாது எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரேமதாச பதவிக் காலம் என்பது சொத்தி உபாலி போன்ற பாதாள உலகத்தினருக்கே பயனளிக்கும் எனவும் சரத் போன்சேகா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிரங்க விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment