ஆயுதம் ஏந்தியிருப்பது மாத்திரம் தேசிய பாதுகாப்பு இல்லை: சஜித் - sonakar.com

Post Top Ad

Wednesday 25 September 2019

ஆயுதம் ஏந்தியிருப்பது மாத்திரம் தேசிய பாதுகாப்பு இல்லை: சஜித்



இப்போது பலர் தேசிய பாதுகாப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை ஆயுதம் ஏந்தியிருப்பது மாத்திரம் தான் தேசிய பாதுகாப்பு. ஆனாலும் தேசிய பாதுகாப்பு என்பதற்கு அது மாத்திரமில்லையென தெரவித்துள்ளார் சஜித் பிரேமதாச.



தேசிய பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பையும் உள்ளடக்கியதே என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும் என அவர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, பள்ளிவாசல்களை, கோயில்களை, தேவாலயங்களை உடைப்பதன் ஊடாக நாட்டை ஸ்திரப்படுத்த முடியாது எனவும் சஜித் இன்று களுததுறை பொதுக் கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment