நாடு முன்னேற வேண்டுமானால் முழுமையான மாற்றம் வேண்டும்: அநுர - sonakar.com

Post Top Ad

Thursday 12 September 2019

நாடு முன்னேற வேண்டுமானால் முழுமையான மாற்றம் வேண்டும்: அநுர


இந்த நாட்டின் நடைபெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் அரசியலவ்hதிகளே. கொள்ளை, போதை வஸ்து கடத்தல் போன்ற வேலைகளுக்கு அனுசரணை வழங்குபவர்களும் கைகொடுப்பவர்களும்  அரசியல்வாதிகள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி அபேட்கர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் குருநாகல்  மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற போது மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகர் அனுரகுமார திசாநாயக இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.



அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 71 ஆண்டுகள் இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சிகள் செய்தன. எனினும் நாட்டில் இடம்பெற்றுள்ளதை  தெளிவாக விளங்கிக் கொள்ள முடியுமம். பாடசாலை  சுகாதாரம் இன்று சீரழிந்து போய் காணப்படுகின்றது. கடன் ரீதியாக பொருளாதாரம் மிகவும் கீழ் மட்டம் சென்றுள்ளது. இந்த நாட்டை உண்மையான நிலைக்கு கொண்டு வர வேண்டுமாயின் முழுமையாக மாற்றம் வேண்டும். அதற்காக மக்கள் சக்தி எங்களைச் சுற்றி ஒன்று சேர வேண்டும்.

நாட்டைச் செய்வது என்பது மந்திரம் இல்லை. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஆட்சியற்ற தன்மை ஏற்படுத்தப்பட்டது ஆசியாவில் ஆச்சரியப்படக் கூடிய ஏழை மக்களின் இதயத்தை வென்ற துட்டகைமுனன் பாராக்கிரமபாகு மன்னன் அவர்கள் மட்டுமல்ல  விஹாரமாகாதேவியும் வருகை தந்தார்.  எனினும் உங்கள் எவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப முடியவில்லை. இந்த குறைந்தவர்களாலேயே மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய இயலுமான அரசியலை தேசிய மக்கள்; சக்தியுடன் கட்டி எழுப்ப முடிந்தது. இது நாட்டுக்கு மிகவும் அவசியமானது.  

அந்த வகையில் கால கட்டத்தில் வேலை செய்தோம். எனினும் எம்மால் முன்னுக்கு செல்ல முடியாது போயிற்று. சிறந்த  வரி சம்ந்தமாக கொள்கைள் எமக்கு தேவையாக இருக்கிறது. விவசாயக் கைத் தொழில், நிர்மாணத்துறைப் பரிவுகளில் உள்ளன  போன்று சிறந்த சுற்றுச் சூழல் இருத்தல் வேண்டும்.  தொழிலாளர்கள்  மேடைக்கு அவசியம். வேலை செய்யும் தொழிலாளர்களைச் சுற்றி ஒரு  மக்கள் வட்டம் இருக்க வேண்டும். அவர்களுக்கு பொய் சொல்லும் சமூகம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. காய்ந்த விறகு நிலையில்  உள்ளது. பாதையில் செல்லும் போது கதைக்க முடியவில்லை.  ஒவ்வொருவருக்கு கௌரமளிக்க முடியாத நிலையிலுள்ள  வரண்ட சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது . அது இன்று உயர்ந்து மலர்ந்துள்ளது. ஈரலிப்பற்ற சமூகத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. சொத்துள்ளவர்களுக்கு மீண்டும் நலிவானவர்களுக்கும் செயற்பட சட்டம் இருக்கிறது. 

சொத்தும் அதிகாரமும் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். அதற்கான சட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இல்லாமலும்  சாதாரண முறையில் சமூகமாக வாழவும் இயலும். அதன் காரணமாகத்தான் மக்கள் சக்தி அதனை நிரப்பத் தயாரக வேண்டும். பொது மக்களுக்கு அதனைச் சுற்றி ஒன்று சேருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment