தெமட்டகொட வீடொன்றில் எரிவாயு வெடிப்பு: இரு பெண்கள் காயம் - sonakar.com

Post Top Ad

Sunday 15 September 2019

தெமட்டகொட வீடொன்றில் எரிவாயு வெடிப்பு: இரு பெண்கள் காயம்



தெமட்டகொட பகுதி வீடொன்றில் எரிவாயுக் கசிவினால் இன்று காலை இடம்பெற்ற  வெடிப்பு சம்பவத்தில் இரு பெண்கள் காயமுற்றுள்ளனர்.


சமந்த வத்தையில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளியொருவரும் வீட்டிலிருந்த பெண்ணொருவருமே இவ்வாறு காயமுற்றுள்ளனர்.

எரிவாயு ஒழுக்கினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment