90 நாட்கள் தடுப்பு: முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி அமீர் TIDயிடம் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Friday 6 September 2019

90 நாட்கள் தடுப்பு: முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி அமீர் TIDயிடம் ஒப்படைப்பு



தீவிரவாத தொடர்புகள் குற்றச்சாட்டுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள், நீண்ட கால தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



ஈஸ்டர் தாக்குதலின் பின் இடம்பெற்று வரும் தொடர் விசாரணைகளின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை இவருக்கு எதிராக பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் பின்னணியிலேயே கைது நடவடிக்கை இடம்பெற்றதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு  தெரிவிக்கிறது.

இந்நிலையில், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெறப்பட்டு தற்போது பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment