செப் 30ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Friday 27 September 2019

செப் 30ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்



ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்வரும் 30ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூடவுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடி ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுவது அல்லது வேறு வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, மைத்ரிபால சிறிசேன - சஜித் இடையே நல்லுறவு நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment