திங்களோடு கொழும்பு 'சுத்தமாகி'விடும்: CMC - sonakar.com

Post Top Ad

Sunday 11 August 2019

திங்களோடு கொழும்பு 'சுத்தமாகி'விடும்: CMC



சில நாட்களாக கொழும்பு வீதிகளில் கழிவுகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அருவக்காடு நோக்கி கழிவுகள் வேகமாக கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் திங்கள் 12ம் திகதியோடு கொழும்பு நகர் மீண்டும் சுத்தமாகிவிடும் எனவும் தெரிவிக்கிறார் கொழும்பு மாநாகர ஆணையாளர்.



சர்ச்சைக்குள்ளான அருவக்காடு பகுதிக்கு கொழும்பிலிருந்து 600 மெற்றிக் தொன் கழிவுகள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வனாத்தவில்லு பிரதேச சபையுடன் கொடுப்பனவுகளுக்கான ஒப்பந்தமும் இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அருவக்காடு பகுதிக்கு கொழும்பிலிருந்து கழிவுகள் கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment