அத்துருகிரிய விகாரைக்குள் சென்ற சந்தேக நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday 17 August 2019

அத்துருகிரிய விகாரைக்குள் சென்ற சந்தேக நபர் கைது!


பொது பல சேனாவுடன் தொடர்புடைய மஸ்ஸென்னே விஜித என அறியப்படும் பௌத்த துறவியை விசாரித்து அத்துருகிரிய விகாரைக்குள் சென்றிருந்த சந்தேக நபர்களுள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



வெலிகடையில் வசிக்கும் 28 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த 10ம் திகதி விகாரைக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட குறித்த நபர் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட நிலையில் அவர் தப்பியொடியிருந்ததாக தெரிவித்து விகாரையைச் குறித்த துறவி பொலிசில் முறையிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment