பெரமுனவினர் சொல்வதை செய்ய மாட்டார்கள்: துமிந்த - sonakar.com

Post Top Ad

Thursday 1 August 2019

பெரமுனவினர் சொல்வதை செய்ய மாட்டார்கள்: துமிந்த


ஓகஸ்ட் 11ம் திகதி பெரமுனவினர் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதாக பிரச்சாரப்படுத்தி வருகின்ற போதிலும் அன்றைய தினம் நடக்கப் போவது வேறு விடயம் என தெரிவிக்கிறார் துமிந்த திசாநாயக்க.



அவர்கள் சொல்வது போல் அன்றைய தினம் வேட்பாளர் அறிவிப்பு இடம்பெறாது என துமிந்த அடித்துக் கூறுகிறார்.

எது எப்படிப் போனாலும் செப்டம்பர் 2ம் திகதி மாநாட்டில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பகிரங்கமாக அறிவிக்கப்படுவார் என துமிந்த தெரிவிக்கின்ற அதேவேளை ஓகஸ்ட் 11ம் திகதி பெரமுனவின் தலைமைப் பொறுப்பு மஹிந்தவிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment