சஜித் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பற்றியே கலந்துரையாடல்! - sonakar.com

Post Top Ad

Saturday 31 August 2019

சஜித் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பற்றியே கலந்துரையாடல்!


கடந்த வியாழன் மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அவசர அழைப்பின் நிமித்தம் சஜித் பிரேமதாச பிரதமர் அலுவலகம் சென்றிருந்ததன் பின்னணி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.



இதன் போது சஜித் பிரேமதாச போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் குறித்து பிரதமர் கலந்துரையாடியதாகவும் கள நிலவரம் மற்றும் புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தான் எப்படியும் போட்டியிடப் போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பு பட்ட செய்தி: https://www.sonakar.com/2019/08/blog-post_385.html

No comments:

Post a Comment