இனி அவர்களுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை: தயாசிறி விசனம்! - sonakar.com

Post Top Ad

Sunday 11 August 2019

இனி அவர்களுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை: தயாசிறி விசனம்!


பெரமுன தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட பின்னர் அக்கட்சியுடன் இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.



சுதந்திரக் கட்சி தரப்பில் மைத்ரிபால சிறிசேனவே வேட்பாளர் என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி வந்தன. எனினும், இன்று மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக பெரமுன தலைவராகியுள்ளதுடன் அக்கட்சி சார்பில் கோட்டாபே வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே தயாசிறி இவ்வாறு தெரிவிக்கின்ற அதேவேளை, மைத்ரிபால சிறிசேனவும் பெரமுனவுக்கு ஆதரவை வெளியிடுவார் எனவும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment