நாட்டின் பாதுகாப்பு 'வழமைக்கு'த் திரும்பி விட்டது: ரஞ்சித் - sonakar.com

Post Top Ad

Saturday 24 August 2019

நாட்டின் பாதுகாப்பு 'வழமைக்கு'த் திரும்பி விட்டது: ரஞ்சித்


நாட்டின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் இனியும் அவசரகால சட்டம் தேவைப்படாது என விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தொடர்புபட்ட அனைவருமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனியும் அவசர கால சட்டம் அவசியமில்லையென்பதால் நீடிக்கப்படவில்லையென அமைச்சர் தெரிவிக்கின்ற அதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளரும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

ஏப்ரல் முறை ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment