பாடசாலை சீருடை வவுச்சரால் 450 மில்லியன் ரூபா நஷ்டம்: CTU - sonakar.com

Post Top Ad

Sunday 25 August 2019

பாடசாலை சீருடை வவுச்சரால் 450 மில்லியன் ரூபா நஷ்டம்: CTU



பாடசாலை சீரூடை வவுச்சர் விநியோகத்தால் 450 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது ஆசிரியர் சங்கம்.



சீருடைக்கான துணி விநியோகத்துக்குப் பதிலாக வவுச்சர்களை விநியோகித்ததனாலேயே அரசுக்கு இவ்வாறு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாக 2015 - 2018 வரையான ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வழங்கப்பட்ட சாட்சியம் அடிப்படையில் ஆசிரியர் சங்கம் இவ்வாறு தெரிவிக்கிறது.

கூட்டாட்சி அரசில் இவ்வாறு சீருடைகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்பட ஆரம்பித்திருந்த அதேவேளை கல்வியமைச்சர் அதனை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment