எங்கள் காலத்தில் 'குப்பைகள்' கொண்டு வந்ததில்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday 28 July 2019

எங்கள் காலத்தில் 'குப்பைகள்' கொண்டு வந்ததில்லை: மஹிந்த


தமது பதவிக் காலத்தின் போது இலங்கைக்கு வெளிநாட்டுக் குப்பைகளைக் கொண்டு வந்ததில்லையெ தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.



ஐக்கிய இராச்சியத்திலிருந்து கடந்த 2 வருட காலமாக இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளுள் மனித எச்சங்களும் இருந்ததாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில் குறித்த கழிவுகளை மீள் ஏற்றுமதி செய்ய காலக் கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், மஹிந்த அரசிலேயே இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டு சுறறு நிரூபமும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment