அநுராதபுர மேயர் உட்பட நால்வர் கைது - sonakar.com

Post Top Ad

Monday 17 June 2019

அநுராதபுர மேயர் உட்பட நால்வர் கைது



1999 ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.க உறுப்பினர் ஒருவரின் மீது கைக்குண்டு தாக்குதல் நடாத்தியிருந்ததன் பின்னணியில் அநுராதபுர மேயர் சோமதாச உட்பட நால்வருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.



கைதான ஏனையோரும் பிரதேச சபைகள் மற்றும் கிராம சேவை அதிகாரியெனவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலினால் 30 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட இழுபறியின் பின் தற்போது விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment