துரித அபிவிருத்திக்கு 'தனிக்கட்சி' ஆட்சியமைய வேண்டும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Monday 24 June 2019

துரித அபிவிருத்திக்கு 'தனிக்கட்சி' ஆட்சியமைய வேண்டும்: ரணில்


நாடு துரிதமாக அபிவிருத்தி காண்பதென்றால் அது தனிக்கட்சி ஆட்சியமைந்தாலேயே சாத்தியம் என தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.



இதுவரை காலம் கூட்டணி ஆட்சியிலேயே மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க, ஒக்டோபரின் பின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அமைந்தமை பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இலகுவானதாகவும் தெரிவிக்கிறார்.

ஜுலை 1ம் திகதி முதல் அடுத்த தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment