மரம் தரிக்கும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யத் தடை - sonakar.com

Post Top Ad

Wednesday 19 June 2019

மரம் தரிக்கும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யத் தடை



சட்டவிரோத காடழிப்பைத் தடுக்கும் நோக்கில் மரம் தரிக்கும் இயந்திரங்கள் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன் வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



எனினும், அரச நிறுவனங்களுக்கு இத்தடையிலிருந்து விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் சுமார் 80,000 பதிவு செய்யப்பட்ட மரம் தரிக்கும் இயந்திரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment