கோட்டாபேவை ஆதரிக்கத் தயாரில்லை: வெல்கம மீண்டும் பிரளயம் - sonakar.com

Post Top Ad

Thursday 27 June 2019

கோட்டாபேவை ஆதரிக்கத் தயாரில்லை: வெல்கம மீண்டும் பிரளயம்



கொலைகார, மனித விரோத பின்னணி கொண்ட யாரையும் ஆதரிக்கத் தயாரில்லையென மீண்டும் தெரிவித்துள்ளார் குமார வெல்கம.



பெரமுன தரப்பிலிருந்து பெரும்பாலும் கோட்டாபே ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் வெல்கம இதனை எதிர்த்து வருவதுடன் கொலைகார, மனித விரோத செயற்பாடுகளின் பின்னணி கொண்ட யாரையும் தாம் ஆதரிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார்.

இதெவேளை, குமார வெல்கமவை பொது வேட்பாளராக்க வேண்டும் எனவும் பெரமுன தரப்பில் சிலர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment