ரிசாத் விவகாரத்தில் முடிவெடுத்து விட்டோம்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Sunday 2 June 2019

ரிசாத் விவகாரத்தில் முடிவெடுத்து விட்டோம்: தயாசிறி


மஹிந்த தரப்பினரால் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதுமே மக்கள் நிலைப்பாடோடே இணங்கி நடக்கும் எனவும் தெரிவிக்கின்ற அவர் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே கட்சி பிரதிபலிக்கும் என தெரிவிக்கிறார்.

இதேவேளை, ரிசாத் பதியுதீனுக்கு பல முனைகளிலிருந்து ஏற்பட்டுள்ள அழுத்தத்தில் அவர் பதவி விலகக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment