பெரமுனவிலிருந்துதான் அடுத்த ஜனாதிபதி - பிரதமர்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Thursday 6 June 2019

பெரமுனவிலிருந்துதான் அடுத்த ஜனாதிபதி - பிரதமர்: பிரசன்ன



இனி இலங்கையில் 'தேசிய அரசு' என்ற பம்மாத்து அவசியமில்லையெனவும் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் பெரமுனவிலிருந்தே தேர்வாவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பிரசன்ன ரணதுங்க.



இப்பின்னணியில் மஹிந்த ராஜபக்ச அடுத்த பிரதமராகப் பதவியேற்பது உறுதியெனவும் பெரமுன தனித்து ஆட்சி நடாத்தி நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அக்கட்சி உறுப்பினர்கள் அவரிடம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment