ஈஸ்டர் தாக்குதல்: 9 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் விசாரணை - sonakar.com

Post Top Ad

Friday 21 June 2019

ஈஸ்டர் தாக்குதல்: 9 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் விசாரணை


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், 9 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.



இதனடிப்படையில், கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களின் டி.ஐ.ஜிக்கள், கட்டான மற்றும் கொட்டஹேன - ஜம்பட்டா வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் வட கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் SSPகளும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment