யாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்! - sonakar.com

Post Top Ad

Sunday 5 May 2019

யாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்!


தன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பேரில் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.



முழுமையாக யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்துள்ள குறித்த கடிதத்தில், 08ம் திகதி புதன் கிழமை பாடசாலைக்கு குண்டு வைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, கடிதத்தின் எழுத்து நடை முஸ்லிம்களோடு தொடர்பில்லாத வகையில் அமைந்துள்ளதால் இது தனிப்பட்ட கோபம் அல்லது தேவைக்காக அனுப்பப்பட்ட கடிதமாக இருக்கலாம் அல்லது யாழில் தலையெடுக்க விளையும் பயங்கரவாத குழுவொன்றின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment